birth of the reader
April 20, 2026•66 words
எப்போது ஒரு பிரதி, ஆசிரியரின் கையிலிருந்து வாசகனின் கைக்கு மாறிவிடுகிறதோ அப்போதே ஆசிரியன் இறந்துவிடுகிறான். பிறகு, அது வாசகனின் பிரதிதான். அவன் அந்தப் பிரதியிலிருந்து அவனுக்கான அர்த்தப்படுத்தலை உருவாக்கிக்கொள்கிறான். வாசகன் மாறும்போது அர்த்தமும் மாறுகிறது.
"The birth of the reader must be at the cost of the death of the Author"
ரோலண் பார்த்ஸ்
ஆசிரியனும் மரணித்து பிறகு வாசகனும் மரணித்து பிரதி மட்டும் உயிர்ப்புடன் இருந்துகொண்டே இருக்கிறது. வெவ்வேறு வாசகர்களுடன் உரையாடிக்கொண்டே இருக்கிறது.
கி.ரா. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தேர்வும், தொகுப்பும் முனைவர். மா.ஞானபாரதி (பாரதி மார்க்ஸ்)